ஹர்திக் பாண்டியா ஒன்னு சொன்னது எனக்கு நம்பிக்கை வந்துச்சு – சூரியகுமார் சுவாரசிய பேட்டி!

0
10942
Sky

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது!

இந்த டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்க இரண்டாவது ஆட்டத்தில் டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது!

- Advertisement -

சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவு ஒத்துழைத்த ஆடுகளத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாற, நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியும் ஒரு பந்து மீதம் இருக்கும் பொழுது தான் வென்றது. இரண்டு பந்துகளுக்கு மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில் சூரியகுமார் பவுண்டரி அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது!

இந்த நிலையில் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் பேசும்பொழுது ” சூழலுக்கு ஏற்ப விளையாடுவது முக்கியமானது. வாஷிங்டனை இழந்த பிறகு நான் இறுதிவரை பேட்டிங் செய்ய வேண்டியதை உறுதி செய்ய வேண்டி இருந்தது. அந்த ரன் அவுட் என் தவறால் வந்தது. பந்து எங்கு சென்றது என்று நான் பார்க்கவில்லை. நிச்சயமாக இது ஒரு சவாலான விக்கெட்!” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” விக்கெட் சவாலானதாக இருந்தாலும் நம்மால் ஆட்டத்தை மாற்றி அமைக்க முடியும். இறுதியாக எங்களுக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. இப்படியான ஆடுகளத்தில் அதற்கு நாம் அமைதியாக செயல்பட வேண்டும். நான் வெற்றிக்கான ரன்களை அடிப்பதற்கு முன்பு ஹர்திக் என்னிடம் வந்து ‘ இந்தப் பந்தில் நீங்கள் வெற்றிக்கான ரன்னை அடிப்பீர்கள்’ என்று கூறினார். எனக்கு அது மிகுந்த நம்பிக்கையை அளித்தது” என்று தெரிவித்திருக்கிறார்!