இரட்டை சதமடித்த ருத்துராஜ் கெய்க்வாட்.. ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து சாதனை!

0
4591

விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் இரண்டாவது காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் அணிகள் மோதி வருகின்றன. இதில் உத்தரபிரதேசம் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

மகாராஷ்டிரா அணிக்கு துவக்க வீரர்களாக ருத்துராஜ் மற்றும் ராகுல் திரிப்பாதி இருவரும் களமிறங்கினர். ராகுல் திரிப்பாதி ஒன்பது ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த பச்சவ்(11) சொற்பரன்களில் ஆட்டம் இழக்க மகாராஷ்டிரா அணி திணறி வந்தது. பாவனே மற்றும் அசிம் காசி இருவரும் கேப்டன் ருத்துராஜூடன் ஜோடி சேர்ந்து சிறு சிறு பார்ட்னர்ஷிப்களை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடி தலா 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்த ஆடிய ருத்துராஜ் அரை சதம் மற்றும் சதத்தை கடந்து அதிரடியாக விளையாட துவங்கினார். இவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் உத்திர பிரதேசம் பந்துவீச்சாளர்கள் மிகவும் திணறி வந்தனர்.

- Advertisement -

300 ரன்கள் எடுப்பதே கடினம் என இருந்தபோது போட்டியின் 49 வது ஓவரை சிவா சிங் வீசினார். அதில் ருத்ராஜ் ஆறு சிக்ஸர்கள் அடித்ததோடு நிற்காமல், ஐந்தாவது பந்து நோபாலாக மாற அதிலும் சிக்ஸர் அடித்து ஒரே ஓவரில் 43 ரன்களை எடுத்து புதிய வரலாறு படைத்தார்.

இதன் மூலம் இரட்டை சதம் அடித்த ருத்ராஜ் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்திருந்தார். இதில் 16 சிக்ஸர்கள் மற்றும் பத்து பவுண்டரிகள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் மகாராஷ்டிரா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 335 ரன்கள் எடுத்தது.