கடந்த முறை நடந்த தவறு..நடப்பு சீசனில் என்னை யாருனு பார்ப்பீங்க! தீபக் சாஹர் பேட்டி

0
143

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும் தீபக்சாகர் தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏலத்தில் சென்னை அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் என்ற பெருமையை தீபக்சாகர் கடந்த மெகா ஏலத்தில் படைத்தார். ஆனால் 14 கோடி ரூபாய் கொடுத்தும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கடந்த சீசனில் வெளியேறினார்.

- Advertisement -

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த தீபக்சாகர் கடந்த அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா தொடரின் போது மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை விரக்தி அடையச் செய்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபக்சாகர், தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன். கடந்த ஒன்றரை மாதமாக என் உடல் தகுதிக்காக கடுமையாக உழைத்தேன்.

ரிஷிக்கிசி சென்று யோகா உள்ளிட்ட பயிற்சியை மேற்கொண்டேன். தியானம் செய்ததோடு கிரிக்கெட் பயிற்சியின் அவ்வப்போது செய்தேன். நமது அடிப்படையை கவனிக்க எல்லோருக்கும் இது போன்ற நேரம் தேவை. ஆண்டு முழுவதும் பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் நான் கிரிக்கெட்டில் இருந்து இந்த காலத்தில் விலகி என் உடல் அளவிலும் மனதளவிலும் மேன்மை பெற கவனம் செலுத்தினேன்.

கடந்த ஆண்டு எனக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது. எனக்கு அடுத்தடுத்து இரண்டு பெரிய காயங்கள் ஏற்பட்டது. இதிலிருந்து குணமடைவது அதிக காலம் தேவைப்படும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் பந்து வீசும் போது அவரது எடையை ஏழு மடங்கு அதிகமாக தாங்க வேண்டும். உதாரணத்திற்கு நான் 80 கிலோ இருக்கிறேன் என்றால் நான் பந்து வீசும் போது என்னுடைய முதுகு 700 கிலோ எடையை தாங்க வேண்டும். இதனால்தான் எனக்கு உடல் தகுதியை மீண்டும் எட்ட அதிக காலம் தேவைப்படுகிறது.

- Advertisement -

இதுவே நான் ஒரு சுழற் பந்து வீச்சாளராகவோ இல்லை பேட்ஸ்மேன் ஆகவோ மட்டும் இருந்திருந்தால் முன்பே உடல் தகுதியை எட்டி கிரிக்கெட் விளையாடி இருப்பேன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை நாங்கள் சந்தித்தோம். ஒரு வீரர்களுக்கு அதிக பணம் செலுத்தி வாங்கி அவரை சுற்றி அணியை கட்டமைக்க நினைக்கும் போது அவர் இல்லை என்றால் நிச்சயம் அது பின்னடைவை தான் சந்திக்கும். இம்முறை ஐபிஎல் மூலம் நான் கம்பேக் கொடுக்க முயற்சி செய்வேன். இது எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீசன் ஆகும் என்று தீபக்சாகர் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி தங்களுடைய முதல் லீக் போட்டியை வரும் 31ஆம் தேதி அகமதாபாத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.