தகுதியான அணிக்கு தான் கோப்பை சென்றிருக்கிறது – இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாராட்டிய விராட் கோலி!

0
1373

தகுதியான அணி வென்றுள்ளது என்று இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எட்டாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதின.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ரிஷ்வான்(15) மற்றும் பாபர் அசாம்(32) இருவரும் நிலைத்து நிற்காமல் அவுட் ஆகினர்.

மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷான் மசூத்(38) மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் சதாப்கான்(20) இருவரும் அணியின் ஸ்கொரை உயர்த்த உதவினர்.

மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

இந்தியாவுடன் அரை இறுதிப் போட்டியில் அசத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் இம்முறை முதல் ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்களுக்கு அவுட் ஆனார்.

ஹரிஸ் புரூக் 20 ரன்களுக்கும், மொயின் அலி 19 ரன்களுக்கும் அவுட்டாக இங்கிலாந்து திணறியது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இறுதி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ்(52) அரைசதம் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19 ஓவர்கள் முடிவில் இலக்கை கடந்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டி20 உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்த விராட் கோலி, “தகுதியான அணி கோப்பையை வென்றிருக்கிறது” என்றவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி: