2 ஓவர் 11 ரன்.. தமிழ்நாட்டு மலிங்கா பெரியசாமி தெறி பவுலிங்.. திரில் போட்டியில் சேப்பாக்கம் திருச்சி அணியை வென்றது

0
162
TNPL2024

நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் நாராயணன் ஜெகதீசன் பேட்டிங்கில், தமிழ்நாட்டு மலிங்கா பெரியசாமி கணேசன் பந்துவீச்சில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சேப்பாக்கம் அணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 15 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டி.சந்தோஷ் குமார் 38 பந்துகளில் 56 ரன்கள், சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கும் நாராயணன் ஜெகதீசன் 40 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடைசிக் கட்டத்தில் ஃபெராரிரோ 15 பந்துகளில் 30 ரன்கள், பிரதோஷ் ரஞ்சன் பால் 14 பந்தில் 29* ரன்கள், அபிஷேக் தன்வார் 8 பந்துகளில் 26* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் சேப்பாக்கம் அணி 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. திருச்சி அணியின் தரப்பில் ஆர்.ராஜ்குமார் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திருச்சி அணிக்கு துவக்க ஆட்டக்காரர் வாசிம் அகமத் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து நான்கு விக்கெட்டுகள் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதனால் சேப்பாக்கம் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்த ஜாஃபர் ஜமால் மற்றும் ஏழாவது ஆர் ராஜ்குமார் இருவரும் சேர்ந்து அதிரடியில் மிரட்டி போட்டியில் பரபரப்பை கூட்டினார்கள். போட்டி கொஞ்சமாக திருச்சியின் பக்கம் சாய்ந்தது.

இந்த நிலையில் ஆட்டத்தின் 16 வது ஓவரை வீசிய தமிழ்நாட்டு மலிங்கா கணேசன் பெரியசாமி ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மேலும் 18வது ஓவருக்கு மீண்டும் வந்து நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சிறப்பாக விளையாடிய ஆர். ராஜ்குமார் விக்கட்டை கைப்பற்றினார். அதிரடியாக விளையாடியவர் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கணேசன் பெரியசாமியின் இந்த இரண்டு ஓவர்கள் போட்டியை மீண்டும் சேப்பாக்கம் பக்கம் திருப்பியது. இறுதிவரை களத்தில் ஜாபர் ஜமால் 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்களில் திருச்சி அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ஓடிஐ கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. ஸ்காட்லாந்து வீரர் அசத்தல் சாதனை.. ரபாடா வேர்ல்ட் ரெக்கார்ட் முறியடிப்பு

இந்த போட்டியில் முதல் இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த கணேசன் பெரியசாமி, கடைசி கட்டத்தில் வீசிய இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கிய விக்கெட்டையும் கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாகவே போட்டி மீண்டும் சேப்பாக்கம் அணியின் கைகளில் வந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -