எம்.எஸ்.தோனியின் தலைமையில் விளையாடினால் நான் கவுரவமாக உணர்வேன் – பிரபல பாலிவுட் நடிகர் விருப்பம்

0
130
MS Dhoni CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்துக்கொண்டால் உலகின் நம்பர் 1 பிரான்ஸிஸைஸ் கிரிக்கெட் அணி என்றே கூறலாம். அதன் சந்தை மதிப்பு மற்றும் வருமானம் மட்டும் அல்லாது, இந்த அணியின் மீது இரசிகர்கள் கொண்டிருக்கும் உணர்வு என்பது அவ்வளவு பிணைப்பானது.

இதற்கு மிக முக்கியக் காரணம் என்றால், அது கேப்டன் மகேந்திர சிங் தோனி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வருட ஐ.பி.எல் சீசன் மோசமாக அமைந்திருந்தாலும், நான்கு முறை சாம்பியனான சென்னை அணிதான், மற்ற அணிகளின் இரசிகர்களும் விரும்பும் அணி. தங்கள் அணியும் சென்னை அணியைப் போல தவறாது ப்ளேஆப்ஸ் சுற்றுக்குப் போக வேண்டுமென்று அனைத்து அணி இரசிகர்களுமே நினைப்பார்கள்.

- Advertisement -

இப்படியான சென்னை அணிக்கான இரசிகர்கள் என்பது குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை, சாமான்ய மக்களில் இருந்து சமுதாயத்தின் மிகப் பிரபலமான பலரும் உண்டு. உலகின் எந்த நாட்டில் கிரிக்கெட் விளையாடினாலும் அங்கு இந்திய அணிக்கான வரவேற்பு இந்திய கிரிக்கெட் இரசிகர்களால் கிடைக்கும். அந்த அளவிற்கு உலகில் எங்கு கிரிக்கெட் நடத்தினாலும், சென்னை அதில் விளையாடினால் நிச்சயம் சென்னை அணி இரசிகர்கள் அங்கும் இருந்து வரவேற்பார்கள்.

சமீபத்தில் இந்திய திரையுலகின் பாலிவுட்டின் மிகப் பிரபலமான கதாநாயகரான ஆமீர்கான் சென்னை அணி இரசிகர்களுக்கும், சென்னை அணிக்கும் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டு இருந்தார். அவரின் அந்த உணர்வுப்பூர்வமான வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டு இருந்தது.

அந்த வீடியோவில் பேசியுள்ள அமீர்கான் “மஞ்சள் ஜெர்சியிலும், மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதும் எனக்குப் பெரிய மரியாதையாக இருக்கும். நான் சென்னை அணியின் வீரராக விளையாடுவேன் என்று உணர்ந்ததிற்கு எனது நன்றிகள். நான் மகியின் தீவீரமான இரசிகன். நான் அவரை முதன் முதலில் பார்த்தபோது வெளியில் அமைதியாக இருக்கின்ற நபராக பார்த்தேன். ஆனால் அவர் உள்ளுக்குள் புயல்போன்று இருக்கிறார். அந்தப் புயலை நாம் பார்க்க முடியாது. சி.எஸ்.கே ஆர்மிக்கும், இரசிகர்களுக்கும் எனது அன்புகள். விசில் போடுங்கள்” என்று பேசியிருக்கிறார்!

- Advertisement -