ரஷீத் கான் கிடையாது.. இந்த சீசனில் யார் அதிக விக்கெட்டுகள் எடுப்பார்? – இந்திய வீரர் என்று கணித்த ஆகாஷ் சோப்ரா!

0
117

இந்த வருட ஐபிஎல் சீசனில் ரஷீத் கான் அதிக விக்கெட்டுகள் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துவிட்டு, இந்திய வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று கணித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் இருந்து துவங்குகிறது.

- Advertisement -

இந்த வருடம் கொரோனா தொற்று வருவதற்கு முன்பு போட்டிகள் எப்படி நடத்தப்பட்டதோ, அந்த முறைப்படி நடக்கிறது என்பதால் ரசிகர்கள் தங்களது ஊரில் போட்டிகள் நடத்தப்படுகிறது என்று மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

முதல் வாரம் நடக்கவுள்ள அனைத்து போட்டிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 8 மணி நேரம் காத்திருப்பதற்குப் பிறகு டிக்கெட்டுகள் பெற முடிந்திருக்கிறது. அவ்வளவு கூட்டம் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு எதிர்பார்ப்புமிக்க இந்த சீசனில், யார் கோப்பையை வெல்வார்? எந்த நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்? யார் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பெறுவார்? யார் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியை பெறுவார்? என்று பல்வேறு கணிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

- Advertisement -

அந்த வகையில் இந்த வருடம் அதிக விக்கெட்டுகளை எடுக்கப்போவது ரஷித் கான் கிடையாது என்றுக்கூறி இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. ரஷித் கான் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடி நல்ல பார்மில் இருக்கிறார். நிறைய விட்டுட்டுகளும் எடுப்பார் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த சீசனில் பர்பிள் கேப் வெல்வதில் சந்தேகம் தான். இந்த வருடம் முகமது சமி அதிக விக்கெட்டுகளை பர்பிள் கேப் கைப்பற்றுவார் என நினைக்கிறேன்.

ஏனெனில் சமீப காலமாக பவர்-பிளே ஓவர்களில் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பவர்-பிளே மற்றும் டெத் ஓவர்களில் அதிக விக்கெட் எடுப்பவர்கள் ஒவ்வொரு சீசனிலும் பர்பிள் கேப் வென்றிருக்கின்றனர். அந்த வகையில் முகமது சமி இந்த சீசனில் அதிக விக்கெட்களைய கைப்பற்றி அதை வெல்வார்.” என்று கணித்துள்ளார்.