20 கி.மீ ஓடுங்கள் ரோகித் என்றேன்.. கோலி, ரோகித் 5 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடிருக்கனும்.. யோக்ராஜ் கருத்து

0
83

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மேலும் ஐந்து ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ரோஹித் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கோலி மே 12ஆம் தேதி அன்று ஓய்வு அறிவித்தார். இதனையடுத்து, சுப்மன் கில் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான சவாலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரே அவருக்கான முதல் பணியாகும்.

- Advertisement -

20 கிலோ மீட்டர் ஓடுங்க ரோகித்:

இந்த நிலையில், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஷுப்மனுக்கு தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படும் வரை காத்திருந்திருக்க வேண்டும் என்று யோக்ராஜ் கருத்து தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “விராட் மற்றும் ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறக்கூடாது.ரோஹித்துக்கு காலை 5 மணிக்கு எழுந்து 20 கிலோமீட்டர் ஓடி உடல் தகுதியைப் பேணுமாறு கூறினேன்”.

“விராட் மற்றும் ரோஹித் இன்னும் ஐந்து ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியும். அவர்கள் விளையாடியிருக்க வேண்டும். இளைஞர்களுக்கு தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதை அவர்கள் பார்த்திருக்க வேண்டும்.பொறுப்பு ஒப்படைக்கப்படவில்லை, அது கில்லுக்கு எறியப்பட்டுவிட்டது,” என்று யோக்ராஜ் கூறினார்.

- Advertisement -

யோக்ராஜின் பெரிய ஆசை

மேலும், யோக்ராஜ் சிங், தனது மகன் யுவராஜ் 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போது, தாம் அவரை தடுத்ததாகவும் வற்புறுத்தியதாகவும் யோக்ராஜ் கூறினார். இது குறித்து பேசிய அவர்,
“யுவராஜ் ஓய்வு பெறும்போது, நான் அவரை இந்திய அணியின் கேப்டனாக்குவேன் என்று உறுதியளித்தேன், நாங்கள் அனைவரையும் வெளியேற்றுவோம், ஆனால் அவர் ஓய்வு பெற்றுவிட்டார்,” என்று யோக்ராஜ் கூறினார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 282 ரன்கள் இலக்கு.. ஆஸி வெற்றி பிரகாசம்

இதனிடையே, இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் தொடங்குகிறது. சுப்மன் கில், இந்தியாவின் 37வது டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அவரது துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக இந்திய அணி 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மண்ணில் டெஸ்ட் தொடரை டிராவிட் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -