கம்பீர் கோலிக்கு செஞ்சது சரி கிடையாது.. நேற்று பிளானில் எனக்கு உடன்பாடு இல்லை – கவாஸ்கர் விமர்சனம்

0
683
Virat

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே தற்போது உத்தர பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பீர் வகுத்த திட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களில் 34 ஓவர்கள் மட்டுமே மழையின் காரணமாக பந்து வீசப்பட்டு இருந்தது. இப்படியான நிலையிலும் நான்காவது நாளில் இந்திய அணி அதிரடியாக விளையாடி போட்டிக்கு உயிர் கொடுத்தது. இருந்த போதிலும் கம்பீர் திட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

யாரும் யோசிக்காத கம்பீர் திட்டம்

நேற்று போட்டியில் பங்களாதேஷ் ஆல் அவுட் ஆன பிறகு, இந்திய அணி இன்று காலை முதல் செஷன் வரையில் விளையாடி குறைந்தபட்சம் 150 ரன்கள் முன்னிலையில் அடுத்து பங்களாதேஷ் அணியை விளையாட வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை நோக்கி செல்வதற்கு எல்லோரும் விளையாடுவார்கள் என்று கருதப்பட்டது.

இப்படியான நிலையில் கம்பீர் எத்தனை விக்கெட் இழந்தாலும் பரவாயில்லை எவ்வளவு வேகமாக ரன்கள் அடிக்கிறோமோ அதுவே முக்கியம் என்பதாக கூறி பேட்ஸ்மேன்களை மிக வேகமாக விளையாட வைத்திருந்தார். அத்தோடு ஒன்பது விக்கெட் இந்திய அணி இழந்ததும் டிக்ளேர் செய்யப்பட்டது.

- Advertisement -

கீழே இறங்கிய விராட் கோலி

இந்த நிலையில் நேற்று இந்திய அணி இரண்டாவது விக்கெட்டை இழந்ததும் வழக்கமாக வரவேண்டிய விராட் கோலி வராமல் ரிஷப் பண்ட் விளையாட வந்தார். இது எல்லோருக்கும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்தது.

இதையும் படிங்க: தொடங்கிய இரானி கோப்பை.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. ருதுராஜ் முதல் இஷான் கிஷன் வரை பங்கேற்பு

இதுகுறித்து கவாஸ்கரிடம் கருத்து கேட்ட பொழுது ” நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் 9000 ரன்கள் எடுத்திருக்கும் ஒரு ஹீரோவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த இடத்தில் அவர்தான் வந்திருக்க வேண்டும். இந்த முடிவில் எனக்கு உடன்பாடு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -